| முகப்பு | தொடக்கம் | 
கார்ப் பெயல் தலைஇய  | 
 119  | 
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை,  | 
|
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப,  | 
|
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து;  | 
|
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ  | 
|
5  | 
நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல,  | 
பணை கெழு வேந்தரை இறந்தும்  | 
|
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
அவனை அவர் பாடியது.
  |