| முகப்பு | தொடக்கம் | 
கிண்கிணி களைந்த கால்  | 
 77  | 
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு,  | 
|
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர்  | 
|
நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,  | 
|
குறுந் தொடி கழித்த கைச் சாபம் பற்றி,  | 
|
5  | 
நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்  | 
யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார் பூண்டு,  | 
|
தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு  | 
|
அயினியும் இன்று அயின்றனனே; வயின்வயின்  | 
|
உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை  | 
|
10  | 
வியந்தன்றும், இழிந்தன்றும், இலனே; அவரை  | 
அழுந்தப் பற்றி, அகல் விசும்பு ஆர்ப்பு எழ,  | 
|
கவிழ்ந்து நிலம் சேர அட்டதை  | 
|
மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும், அதனினும் இலனே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
அவனை அவர் பாடியது.
  |