| முகப்பு | தொடக்கம் | 
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு  | 
 150  | 
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன  | 
|
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி,  | 
|
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என்  | 
|
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி,  | 
|
5  | 
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால்,  | 
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி,  | 
|
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன்,  | 
|
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ,  | 
|
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை,  | 
|
10  | 
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே  | 
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத்  | 
|
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின்  | 
|
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின்,  | 
|
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,  | 
|
15  | 
நல் மரன் நளிய நறுந் தண் சாரல்,  | 
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி,  | 
|
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே,  | 
|
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம்  | 
|
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என,  | 
|
20  | 
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்  | 
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்;  | 
|
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்;  | 
|
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்;  | 
|
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே  | 
|
25  | 
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி  | 
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின்,  | 
|
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர்,  | 
|
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே.  | 
|
திணை அது; துறை இயன்மொழி.
  | |
அவனை அவர் பாடியது.
  |