| முகப்பு | தொடக்கம் | 
கொண்டைக் கூழைத்  | 
 61  | 
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர்  | 
|
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,  | 
|
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட  | 
|
பழன வாளைப் பரூஉக் கண் துணியல்  | 
|
5  | 
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக,  | 
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி,  | 
|
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும்  | 
|
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர்  | 
|
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர்  | 
|
10  | 
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து  | 
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும்,  | 
|
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன்,  | 
|
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி,  | 
|
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்,  | 
|
15  | 
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன்  | 
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர்  | 
|
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது,  | 
|
திருந்து அடி பொருந்த வல்லோர்  | 
|
வருந்தக் காண்டல், அதனினும் இலமே.  | 
|
திணை வாகை; துறை அரச வாகை.
  | |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
  |