| முகப்பு | தொடக்கம் | 
கோதை மார்பின் கோதையானும்  | 
 48  | 
கோதை மார்பின் கோதையானும்,  | 
|
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்,  | 
|
மாக் கழி மலர்ந்த நெய்தலானும்,  | 
|
கள் நாறும்மே, கானலம் தொண்டி;  | 
|
5  | 
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்;  | 
அன்னோற் படர்தியாயின், நீயும்  | 
|
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல!  | 
|
'அமர் மேம்படூஉம் காலை, நின்  | 
|
புகழ் மேம்படுநனைக் கண்டனம்' எனவே.  | 
|
திணை பாடாண் திணை; துறை புலவராற்றுப் படை.
  | |
சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.
  |