| முகப்பு | தொடக்கம் | 
ஞாயிற்று அன்ன ஆய் மணி  | 
 362  | 
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த  | 
|
மதி உறழ் ஆரம் மார்பில் புரள,  | 
|
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்ப,  | 
|
பொழிலகம் பரந்த பெ.................  | 
|
5  | 
.......................கும விசய வெண் கொடி  | 
அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை,  | 
|
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின்,  | 
|
ஆக் குரல் காண்பின் அந்தணாளர்  | 
|
நான்மறைக் குறி .......................... யின்  | 
|
10  | 
அறம் குறித்தன்று; பொருள் ஆகுதலின்  | 
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇ,  | 
|
கை பெய்த நீர் கடற் பரப்ப,  | 
|
ஆம் இருந்த அடை நல்கி,  | 
|
சோறு கொடுத்து, மிகப் பெரிதும்  | 
|
15  | 
வீறு சான......................... நன்றும்  | 
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்,  | 
|
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப்  | 
|
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்,  | 
|
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு,  | 
|
20  | 
இல் என்று இல்வயின் பெயர, மெல்ல  | 
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி,  | 
|
உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே.  | 
|
திணை பொதுவியல்; துறை பெருங்காஞ்சி.
  | |
அவனைச் சிறுவெண்டேரையார் பாடியது.
  |