| முகப்பு | தொடக்கம் | 
ஞால மீமிசை வள்ளியோர்  | 
 179  | 
'ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென,  | 
|
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை  | 
|
மலர்ப்போர் யார்?' என வினவலின், மலைந்தோர்  | 
|
விசி பிணி முரசமொடு மண் பல தந்த  | 
|
5  | 
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன்,  | 
படை வேண்டுவழி வாள் உதவியும்,  | 
|
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,  | 
|
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து  | 
|
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து,  | 
|
10  | 
தோலா நல் இசை, நாலை கிழவன்,  | 
பருந்து பசி தீர்க்கும் நற் போர்த்  | 
|
திருந்து வேல் நாகன் கூறினர், பலரே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
நாலை கிழவன் நாகனை வடநெடுந் தத்தனார் பாடியது.
  |