| முகப்பு | தொடக்கம் | 
தூங்கு கையான்  | 
 22  | 
தூங்கு கையான் ஓங்கு நடைய,  | 
|
உறழ் மணியான் உயர் மருப்பின,  | 
|
பிறை நுதலான் செறல் நோக்கின,  | 
|
பா அடியான் பணை எருத்தின,  | 
|
5  | 
தேன் சிதைந்த வரை போல,  | 
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து,  | 
|
அயறு சோரும் இருஞ் சென்னிய,  | 
|
மைந்து மலிந்த மழ களிறு  | 
|
கந்து சேர்பு நிலைஇ வழங்க;  | 
|
10  | 
பாஅல் நின்று கதிர் சோரும்  | 
வான் உறையும் மதி போலும்  | 
|
மாலை வெண் குடை நீழலான்,  | 
|
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க;  | 
|
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த  | 
|
15  | 
ஆய் கரும்பின் கொடிக் கூரை,  | 
சாறு கொண்ட களம் போல,  | 
|
வேறு வேறு பொலிவு தோன்ற;  | 
|
குற்று ஆனா உலக்கையான்  | 
|
கலிச் சும்மை வியல் ஆங்கண்,  | 
|
20  | 
பொலந் தோட்டுப் பைந் தும்பை  | 
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ,  | 
|
சின மாந்தர் வெறிக் குரவை  | 
|
ஓத நீரின் பெயர்பு பொங்க;  | 
|
வாய் காவாது பரந்து பட்ட  | 
|
25  | 
வியன் பாசறைக் காப்பாள!  | 
வேந்து தந்த பணி திறையான்  | 
|
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும்,  | 
|
ஓங்கு கொல்லியோர், அடு பொருந!  | 
|
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்!  | 
|
30  | 
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே,  | 
நிற் பாடிய வயங்கு செந் நாப்  | 
|
பின் பிறர் இசை நுவலாமை,  | 
|
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ!  | 
|
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே  | 
|
35  | 
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து,  | 
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை,  | 
|
வேறு புலத்து இறுக்கும் தானையொடு,  | 
|
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே!  | 
|
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
  | |
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
  |