| முகப்பு | தொடக்கம் | 
தேஎம் கொண்ட வெண் மண்டையான்  | 
 352  | 
தேஎம் கொண்ட வெண் மண்டையான்,  | 
|
வீ...................................................................கறக்குந்து;  | 
|
அவல் வகுத்த பசுங் குடையான்,  | 
|
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து;  | 
|
5  | 
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர்  | 
குன்று ஏறிப் புனல் பாயின்,  | 
|
புற வாயால் புனல் வள  | 
|
............................................................ நொடை நறவின்  | 
|
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி  | 
|
10  | 
உறந்தை அன்ன உரைசால் நன் கலம்  | 
கொடுப்பவும் கொளாஅனெ  | 
|
.......................ர் தந்த நாகு இள வேங்கையின்,  | 
|
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின்  | 
|
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும்  | 
|
15  | 
சிறு கோல் உளையும் புரவி ª..................  | 
...................................................................... யமரே.  | 
திணையும் துறையும் அவை.
  | |
பரணர் பாடியது.
  |