| முகப்பு | தொடக்கம் | 
நிரப்பாது கொடுக்கும் செல்வமும்  | 
 180  | 
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;  | 
|
'இல்' என மறுக்கும் சிறுமையும் இலனே;  | 
|
இறை உறு விழுமம் தாங்கி, அமரகத்து  | 
|
இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து,  | 
|
5  | 
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி,  | 
வடு இன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து,  | 
|
ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன்;  | 
|
இன்மை தீர வேண்டின், எம்மொடு  | 
|
நீயும் வம்மோ? முது வாய் இரவல!  | 
|
10  | 
யாம் தன் இரக்கும்காலை, தான் எம்  | 
உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க்  | 
|
கருங் கைக் கொல்லனை இரக்கும்,  | 
|
'திருந்து இலை நெடு வேல் வடித்திசின்' எனவே.  | 
|
திணையும் துறையும் அவை; துறை பாணாற்றுப் படையும் ஆம்.
  | |
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
  |