| முகப்பு | தொடக்கம் | 
நிலமிசை வாழ்நர்  | 
 43  | 
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர,  | 
|
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி,  | 
|
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும்  | 
|
அவிர்சடை முனிவரும் மருள, கொடுந்சிறைக்  | 
|
5  | 
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ,  | 
தன் அகம் புக்க குறு நடைப் புறவின்  | 
|
தபுதி அஞ்சிச் சீரை புக்க  | 
|
வரையா ஈகை உரவோன் மருக!  | 
|
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின்  | 
|
10  | 
தேர் வண் கிள்ளி தம்பி! வார் கோல்,  | 
கொடுமர மறவர் பெரும! கடு மான்  | 
|
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்:  | 
|
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்  | 
|
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது  | 
|
15  | 
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி,  | 
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்,  | 
|
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே;  | 
|
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்  | 
|
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என,  | 
|
20  | 
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,  | 
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள்  | 
|
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி  | 
|
எக்கர் இட்ட மணலினும் பலவே!  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.
  |