| முகப்பு | தொடக்கம் | 
நீயே, தண் புனல் காவிரிக்  | 
 58  | 
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே,  | 
|
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக்  | 
|
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு,  | 
|
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது,  | 
|
5  | 
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ,  | 
இளையது ஆயினும் கிளை அரா எறியும்  | 
|
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்  | 
|
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,  | 
|
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,  | 
|
10  | 
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,  | 
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,  | 
|
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்  | 
|
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;  | 
|
பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,  | 
|
15  | 
நீல் நிற உருவின் நேமியோனும், என்று  | 
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,  | 
|
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,  | 
|
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?  | 
|
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே;  | 
|
20  | 
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்  | 
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப்  | 
|
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம்  | 
|
கையகப்படுவது பொய் ஆகாதே;  | 
|
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,  | 
|
25  | 
தொல்லோர் சென்ற நெறிய போலவும்,  | 
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்  | 
|
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது,  | 
|
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று  | 
|
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக்  | 
|
30  | 
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி  | 
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த  | 
|
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.  | 
|
திணை பாடாண் திணை; துறை உடனிலை.
  | |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
  |