| முகப்பு | தொடக்கம் | 
நீயே, புறவின் அல்லல்  | 
 46  | 
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்  | 
|
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,  | 
|
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,  | 
|
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;  | 
|
5  | 
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த  | 
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி,  | 
|
விருந்தின் புன்கண் நோவுடையர்;  | 
|
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே!  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.
  |