| முகப்பு | தொடக்கம் | 
நெல் அரியும் இருந்  | 
 24  | 
நெல் அரியும் இருந் தொழுவர்  | 
|
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,  | 
|
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து;  | 
|
திண் திமில் வன் பரதவர்  | 
|
5  | 
வெப்பு உடைய மட்டு உண்டு,  | 
தண் குரவைச் சீர் தூங்குந்து;  | 
|
தூவல் கலித்த தேம் பாய் புன்னை  | 
|
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்  | 
|
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து;  | 
|
10  | 
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல்  | 
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர்  | 
|
இரும் பனையின் குரும்பை நீரும்,  | 
|
பூங் கரும்பின் தீம் சாறும்,  | 
|
ஓங்கு மணல் குவவுத் தாழைத்  | 
|
15  | 
தீம் நீரொடு உடன் விராஅய்,  | 
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;  | 
|
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய  | 
|
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி  | 
|
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக்  | 
|
20  | 
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்,  | 
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர்,  | 
|
குப்பை நெல்லின், முத்தூறு தந்த  | 
|
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய!  | 
|
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது  | 
|
25  | 
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே  | 
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு  | 
|
நின்று மூத்த யாக்கை அன்ன, நின்  | 
|
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த  | 
|
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த,  | 
|
30  | 
இரவல் மாக்கள் ஈகை நுவல,  | 
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய  | 
|
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து,  | 
|
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது  | 
|
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை,  | 
|
35  | 
மலர் தலை உலகத்துத் தோன்றி,  | 
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே.  | 
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
  | |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
  |