| முகப்பு | தொடக்கம் | 
பதிமுதல் பழகாப் பழங்கண்  | 
 393  | 
பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்  | 
|
குறு நெடுந் துணையொடு கூமை வீதலின்,  | 
|
குடி முறை பாடி, ஒய்யென வருந்தி,  | 
|
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும்  | 
|
5  | 
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின்,  | 
'வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?' என,  | 
|
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா,  | 
|
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென,  | 
|
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி,  | 
|
10  | 
ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல்  | 
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப,  | 
|
கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த  | 
|
மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன,  | 
|
வெண் நிண மூரி அருள, நாள் உற  | 
|
15  | 
ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என்  | 
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி,  | 
|
போது விரி பகன்றைப் புது மலர் அன்ன,  | 
|
அகன்று மடி கலிங்கம் உடீஇ, செல்வமும்,  | 
|
கேடு இன்று நல்குமதி, பெரும! மாசு இல்  | 
|
20  | 
மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,  | 
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி,  | 
|
'கோடை ஆயினும், கோடி...............................  | 
|
காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந!  | 
|
வாய் வாள் வளவன்! வாழ்க! எனப்  | 
|
25  | 
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே.  | 
திணையும் துறையும் அவை.
  | |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.
  |