| முகப்பு | தொடக்கம் | 
பயம் கெழு மா மழை  | 
 266  | 
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி,  | 
|
கயம் களி முளியும் கோடைஆயினும்,  | 
|
புழல்கால் ஆம்பல் அகல் அடை நீழல்,  | 
|
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை  | 
|
5  | 
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்  | 
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்!  | 
|
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி!  | 
|
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்,  | 
|
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல,  | 
|
10  | 
வல்லே களைமதிஅத்தை உள்ளிய  | 
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை,  | 
|
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என்  | 
|
அறிவு கெட நின்ற நல்கூர்மையே!  | 
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
  | |
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
  |