| முகப்பு | தொடக்கம் | 
பரலுடை மருங்கின் பதுக்கை  | 
 264  | 
பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி,  | 
|
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு,  | 
|
அணி மயில் பீலி சூட்டி, பெயர் பொறித்து,  | 
|
இனி நட்டனரே, கல்லும்; கன்றொடு  | 
|
5  | 
கறவை தந்து பகைவர் ஓட்டிய  | 
நெடுந்தகை கழிந்தமை அறியாது,  | 
|
இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே?  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
....................உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.
  |