| முகப்பு | தொடக்கம் | 
பல் சான்றீரே! பல் சான்றீரே! குமரி மகளிர்  | 
 301  | 
பல் சான்றீரே! பல் சான்றீரே!  | 
|
குமரி மகளிர் கூந்தல் புரைய,  | 
|
அமரின் இட்ட அரு முள் வேலிக்  | 
|
கல்லென் பாசறைப் பல் சான்றீரே!  | 
|
5  | 
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்புமின்;  | 
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின்;  | 
|
எனை நாள் தங்கும் நும் போரே, அனை நாள்  | 
|
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர்  | 
|
எதிர் சென்று எறிதலும்செல்லான்; அதனால்  | 
|
10  | 
அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே?  | 
'பலம்' என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக் காண்  | 
|
நிலன் அளப்பன்ன நில்லாக் குறு நெறி,  | 
|
வண் பரிப் புரவிப் பண்பு பாராட்டி,  | 
|
எல்லிடைப் படர்தந்தோனே; கல்லென  | 
|
15  | 
வேந்து ஊர் யானைக்கு அல்லது,  | 
ஏந்துவன் போலான், தன் இலங்கு இலை வேலே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
ஆவூர் மூலங் கிழார் பாடியது.
  |