| முகப்பு | தொடக்கம் | 
பலர்க்கு நிழல் ஆகி  | 
 223  | 
பலர்க்கு நிழல் ஆகி, உலகம் மீக்கூறி,  | 
|
தலைப்போகன்மையின் சிறு வழி மடங்கி,  | 
|
நிலை பெறு நடுகல் ஆகியக் கண்ணும்,  | 
|
இடம் கொடுத்து அளிப்ப, மன்ற உடம்போடு  | 
|
5  | 
இன் உயிர் விரும்பும் கிழமைத்  | 
தொல் நட்புடையார் தம் உழைச் செலினே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.
  |