| முகப்பு | தொடக்கம் | 
பனி வரை நிவந்த  | 
 200  | 
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்  | 
|
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்  | 
|
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி,  | 
|
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து,  | 
|
5  | 
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப!  | 
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல்,  | 
|
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை,  | 
|
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே!  | 
|
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை  | 
|
10  | 
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,  | 
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த  | 
|
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்;  | 
|
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே,  | 
|
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்;  | 
|
15  | 
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர்  | 
அடங்கா மன்னரை அடக்கும்  | 
|
மடங்கா விளையுள் நாடு கிழவோயே!  | 
|
திணை அது; துறை பரிசில் துறை.
  | |
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
  |