| முகப்பு | தொடக்கம் | 
பாசறையீரே! பாசறையீரே!  | 
 285  | 
பாசறையீரே! பாசறையீரே!  | 
|
துடியன் கையது வேலே; அடி புணர்  | 
|
வாங்கு இரு மருப்பின் தீம் தொடைச் சீறியாழ்ப்  | 
|
பாணன் கையது தோலே; காண்வரக்  | 
|
5  | 
கடுந் தெற்று மூடையின்......................  | 
வாடிய மாலை மலைந்த சென்னியன்;  | 
|
வேந்து தொழில் அயரும் அருந் தலைச் சுற்றமொடு  | 
|
நெடு நகர் வந்தென, விடு கணை மொசித்த  | 
|
மூரி வெண் தோல்  | 
|
10  | 
சேறுபடு குருதிச் செம்மல் உக்குஓஒ!  | 
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக,  | 
|
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே;  | 
|
அது கண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலை பணிந்து  | 
|
இறைஞ்சியோனே, குருசில்! பிணங்கு கதிர்  | 
|
15  | 
அலமருங் கழனித் தண்ணடை ஒழிய,  | 
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர்  | 
|
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.  | 
|
திணை வாகை; துறை ...............முல்லை.
  | |
அரிசில் கிழார் பாடியது.
  |