| முகப்பு | தொடக்கம் | 
மடங்கலின் சினைஇ  | 
 71  | 
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,  | 
|
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து,  | 
|
என்னொடு பொருதும் என்ப; அவரை  | 
|
ஆர் அமர் அலறத் தாக்கி, தேரொடு  | 
|
5  | 
அவர்ப் புறங்காணேன் ஆயின் சிறந்த  | 
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக;  | 
|
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து,  | 
|
திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து  | 
|
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்  | 
|
10  | 
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின்  | 
பொய்யா யாணர் மையல் கோமான்  | 
|
மாவனும், மன் எயில் ஆந்தையும், உரை சால்  | 
|
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,  | 
|
வெஞ் சின இயக்கனும், உளப்படப் பிறரும்,  | 
|
15  | 
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த  | 
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ,  | 
|
மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த  | 
|
தென் புலம் காவலின் ஒரீஇ, பிறர்  | 
|
வன் புலம் காவலின் மாறி யான் பிறக்கே!  | 
|
திணை காஞ்சி; துறை வஞ்சினக் காஞ்சி.
  | |
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் பாட்டு.
  |