| முகப்பு | தொடக்கம் | 
மண் திணிந்த நிலனும்  | 
 2  | 
மண் திணிந்த நிலனும்,  | 
|
நிலன் ஏந்திய விசும்பும்,  | 
|
விசும்பு தைவரு வளியும்,  | 
|
வளித் தலைஇய தீயும்,  | 
|
5  | 
தீ முரணிய நீரும், என்றாங்கு  | 
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல  | 
|
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,  | 
|
வலியும், தெறலும், அளியும், உடையோய்!  | 
|
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்  | 
|
10  | 
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும்,  | 
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந!  | 
|
வான வரம்பனை! நீயோ, பெரும!  | 
|
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,  | 
|
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை  | 
|
15  | 
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,  | 
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!  | 
|
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,  | 
|
நாஅல் வேத நெறி திரியினும்,  | 
|
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,  | 
|
20  | 
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து,  | 
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,  | 
|
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்  | 
|
முத் தீ விளக்கின், துஞ்சும்  | 
|
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!  | 
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
  | |
சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்பாடியது.
  |