| முகப்பு | தொடக்கம் | 
முரசு கடிப்பு இகுப்பவும்  | 
 158  | 
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,  | 
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை,  | 
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்  | 
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்  | 
|
5  | 
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்;  | 
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த,  | 
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்;  | 
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல்,  | 
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்;  | 
|
10  | 
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை,  | 
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை,  | 
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி  | 
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று  | 
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர,  | 
|
15  | 
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை,  | 
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு  | 
|
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப்  | 
|
பாடி வருநரும் பிறரும் கூடி  | 
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண்  | 
|
20  | 
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக்  | 
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி,  | 
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,  | 
|
முள் புற முது கனி பெற்ற கடுவன்  | 
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,  | 
|
25  | 
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!  | 
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண!  | 
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு,  | 
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே!  | 
|
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
  | |
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
  |