| முகப்பு | தொடக்கம் | 
வணர் கோட்டுச் சீறியாழ்  | 
 155  | 
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ,  | 
|
'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க?' என,  | 
|
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்,  | 
|
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ  | 
|
5  | 
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு,  | 
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்  | 
|
கொண் பெருங் கானத்துக் கிழவன்  | 
|
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே.  | 
|
திணை அது; துறை பாணாற்றுப்படை.
  | |
அவனை அவர் பாடியது.
  |