முகப்பு | தொடக்கம் |
ஆம்பல் |
16 |
வினை மாட்சிய விரை புரவியொடு, |
|
மழை உருவின தோல் பரப்பி, |
|
முனை முருங்கத் தலைச் சென்று, அவர் |
|
விளை வயல் கவர்பூட்டி, |
|
5 |
மனை மரம் விறகு ஆகக் |
கடி துறை நீர்க் களிறு படீஇ, |
|
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் |
|
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற, |
|
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை, |
|
10 |
துணை வேண்டாச் செரு வென்றி, |
புலவு வாள், புலர் சாந்தின், |
|
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்! |
|
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், |
|
பனிப் பகன்றை, கனிப் பாகல், |
|
15 |
கரும்பு அல்லது காடு அறியாப் |
பெருந் தண் பணை பாழ் ஆக, |
|
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை, |
|
நாம நல் அமர் செய்ய, |
|
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே. |
|
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.
|
61 |
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் |
|
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், |
|
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட |
|
பழன வாளைப் பரூஉக் கண் துணியல் |
|
5 |
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, |
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, |
|
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் |
|
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் |
|
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர் |
|
10 |
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து |
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும், |
|
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன், |
|
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி, |
|
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், |
|
15 |
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன் |
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் |
|
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, |
|
திருந்து அடி பொருந்த வல்லோர் |
|
வருந்தக் காண்டல், அதனினும் இலமே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
176 |
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் |
|
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின், |
|
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத் |
|
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம், |
|
5 |
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின், |
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ் |
|
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை |
|
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே! |
|
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர் |
|
10 |
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல, |
காணாது கழிந்த வைகல், காணா |
|
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன் |
|
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
266 |
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி, |
|
கயம் களி முளியும் கோடைஆயினும், |
|
புழல்கால் ஆம்பல் அகல் அடை நீழல், |
|
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை |
|
5 |
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் |
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்! |
|
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி! |
|
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன், |
|
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல, |
|
10 |
வல்லே களைமதிஅத்தை உள்ளிய |
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை, |
|
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என் |
|
அறிவு கெட நின்ற நல்கூர்மையே! |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
| |
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
|
280 |
என்னை மார்பில் புண்ணும் வெய்ய; |
|
நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்; |
|
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா; |
|
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; |
|
5 |
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; |
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் |
|
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா; |
|
துடிய! பாண! பாடு வல் விறலி! |
|
என் ஆகுவிர்கொல்? அளியிர்; நுமக்கும் |
|
10 |
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும் |
மண்ணுறு மழித் தலைத் தெண் நீர் வார, |
|
தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியல் |
|
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் |
|
கழி கல மகளிர் போல, |
|
15 |
வழி நினைந்திருத்தல், அதனினும் அரிதே! |
திணை பொதுவியல்; துறை ஆனந்தப்பையுள்.
| |
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
352 |
தேஎம் கொண்ட வெண் மண்டையான், |
|
வீ...................................................................கறக்குந்து; |
|
அவல் வகுத்த பசுங் குடையான், |
|
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
5 |
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
குன்று ஏறிப் புனல் பாயின், |
|
புற வாயால் புனல் வள |
|
............................................................ நொடை நறவின் |
|
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி |
|
10 |
உறந்தை அன்ன உரைசால் நன் கலம் |
கொடுப்பவும் கொளாஅனெ |
|
.......................ர் தந்த நாகு இள வேங்கையின், |
|
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் |
|
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும் |
|
15 |
சிறு கோல் உளையும் புரவி ª................. |
...................................................................... யமரே. |
திணையும் துறையும் அவை.
| |
பரணர் பாடியது.
|