முகப்பு | தொடக்கம் |
நெய்தல் |
48 |
கோதை மார்பின் கோதையானும், |
|
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும், |
|
மாக் கழி மலர்ந்த நெய்தலானும், |
|
கள் நாறும்மே, கானலம் தொண்டி; |
|
5 |
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்; |
அன்னோற் படர்தியாயின், நீயும் |
|
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல! |
|
'அமர் மேம்படூஉம் காலை, நின் |
|
புகழ் மேம்படுநனைக் கண்டனம்' எனவே. |
|
திணை பாடாண் திணை; துறை புலவராற்றுப் படை.
| |
சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.
|
144 |
அருளாய் ஆகலோ கொடிதே; இருள் வர, |
|
சீறியாழ் செவ்வழி பண்ணி, யாழ நின் |
|
கார் எதிர் கானம் பாடினேமாக, |
|
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் |
|
5 |
கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப, |
இனைதல் ஆனாளாக, 'இளையோய்! |
|
கிளையைமன், எம் கேள் வெய்யோற்கு?' என, |
|
யாம் தன் தொழுதனம் வினவ, காந்தள் |
|
முகை புரை விரலின் கண்ணீர் துடையா, |
|
10 |
'யாம் அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள், இனி: |
எம் போல் ஒருத்தி நலன் நயந்து, என்றும், |
|
வரூஉம்' என்ப 'வயங்கு புகழ்ப் பேகன் |
|
ஒல்லென ஒலிக்கும் தேரொடு, |
|
முல்லை வேலி, நல் ஊரானே.' |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவள் காரணமாகப் பரணர் பாடியது.
|
339 |
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு |
|
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர் |
|
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து; |
|
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல் |
|
5 |
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; |
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் |
|
கடல் ஆடிக் கயம் பாய்ந்து, |
|
கழி நெய்தல் பூக்குறூஉந்து; |
|
பைந் தழை துயல்வரும் செறு விறற.............. |
|
10 |
............................................................................லத்தி |
வளர வேண்டும், அவளே, என்றும் |
|
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி, |
|
முறம் செவி யானை வேந்தர் |
|
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|