இனி,
விருந்தோம்பாமையால் இல்லறவகையாலும் செருக்கடங்காமையால்
துறவறவகையாலும், ஆரியர் வீட்டையடைவதும் இயலாதென
அறிந்து கொள்க.
17. இன்பத்துப்பாலின் இருதிறம்
சில ஆரிய
நூல்களைக் கற்ற துணையானே தம்மைச் சிறந்த அறிஞராகக்
கருதிக்கொள்ளும் மடத்தலைவரும் போலித்துறவியரும்,
திருக்குறள் இன்பத்துப்பாலைக் கொண்டிருப்பதால்
துறவியர் கற்கத்தக்க நூலன்றென்று துணிந்து கூறுவர்.
இறைவனுக்கும் ஆதனுக்கு மிடைப்பட்ட அன்பை உவமை வாயிலாக விளக்குதற்கு, கணவன் மனைவியரிடைப்பட்ட காதலினுஞ் சிறந்தது வேறின்மை யானேயே, சிவனடியாருட் சிறந்த மாணிக்கவாசகர் சிற்றம்பலக் கோவையைப் பாடினாரென்றும், அதன் வெளிப்பொருள் உலகநெறியும் உட்பொருள் வீட்டுநெறியும் பற்றினவென்றும்,
அறிந்துகொள்க.
"ஆரணங்கா
ணென்ப ரந்தணர் யோகியர் ஆகமத்தின்
காரணங்கா ணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங்கா ணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர்
சீரணங் காகிய சிற்றம் பலக்கோவை செப்பிடினே."
(தனியன்)
இத்தகையதே திருக்குறளின்பத்துப் பாலுமென்க.
|