10. திருவள்ளுவர் காலத் தமிழ் நூல்களும் கலையறிவியல்களும்.
பல்துறை
நூல்கள்:-
தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்று
நீங்கா நிலனாள் பவர்க்கு. (313)
கற்க கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக. (361)
யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாதவாறு. (397)
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (401)
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு. (533)
அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு. (1110)
சிறந்த நூல்கள்:-
நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்த
னுண்மை யறிவே மிகும். (373)
விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர். (410)
|