- 100 -

இதுமுதல் சண்டமாரிகோயிலில் நிகழும் நிகழ்ச்சி


57. இனையன நினைவை யோரு மிளைஞரை விரைவிற் கொண்டு
  தனைர சருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி
  முனைமுக வாயிற் பீட முன்னருய்த் திட்டு நிற்பக
  கனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே.

 (இ-ள்) இளையன நினைவை ஒரும்-இத்தகைய தூய நினைவை ஆராயும், இளைஞரை- --, சண்டன்-சண்டகருமன், தனை அரசு அருளும் பெற்றி - தன்னை அரசன் சம்மானிக்குந் தன்மையில், விரைவில்  கொண்டு - விரைவாகக் கொண்டு சென்று, அச் சண்டமாரிவாயில் - அந்தச் சண்டமாரிகோயில் வாயிலின்,  முனைமுகபீடம் முன்னர் - எதிரிலுள்ள கொலைக்களமான  பலிபீடத்தின்முன்னே, உய்த்து இட்டு நிற்ப - (அவ்வி்ருவரையும்) செலுத்தி நிற்கச்செய்து  தான் விலகி நிற்ப,  கனை கழல் அரசன் - ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த  மாரிதத்தவரசன், கையில் வாள் உருவினான். - (அவ்விளைஞரைப் பலியிடவேண்டி உறையினின்றும்)  வீரவாளினைக் கையில் உருவி ஓங்கினான்; ஐயோ-ஐயோ  என்னபாவம!் (எ-று.)

சண்டகருமன் இளைஞரைக் கொண்டு  பலிபீடத்தின் முன் இட்டு நிற்பப் பலியிடக் காத்திருந்த வேந்தன்வீரவாளினை  உருவி ஓங்கினாள்  என்க.

ஓர்தல் - உணர்தல்  யசோ.  32.  முதல் கூறியவற்றைக் தொகுத்து,  ‘இனையன நினைவை ஓரும்  இளைஞர்‘  என்றார். முனை - எதிர், இனி, முனைமுகம் - போர்முனைபோலும் இடம் எனினுமாம்.  எண்ணிறந்தவுயிர் கொல்லப்படுதலின், ஐயோ-இரக்கக் குறிப்பு.             (53)