மிருப்பவும் என்னனை நீடுவாழுமாறுகூறப் பணித்த ஊரவரின்
அறியாமையை நோக்கி யாங்கள் சிரித்தனம் என்றானென்க. ‘முன்னுயி ருருவிற் கேத முயன்று செய்
பாவந் தன்னால; என்றது,
இவ்விளைஞர் யசோதரனும் சந்திரமதியுமாயிருந்தபோது செய்த மாக் கோழியின் பலியாலாய
தீவினையை, இவ்விவரம், ‘செய்த வெந்திரியக் கொலை‘ என்னும் (யசோ. 312-ம்) பாடலில்
வருவதனா லறிக. எதிரிலுள்ள விலங்கினங்களைக் குறித்து, ‘இன்ன பல்பிறவி'; என்றான். மன்னன் பலியிடப் போகும் உயிருள்ள உருவங்கள்
பல என்ப தறிவித்தற்கு, ‘மன்னுயி்ர';என வலியுறுத்தினார். மன்-மிகுதி. ‘மன்னிலை மிகுதி வேந்தே‘என்பது
சூடாமணி நிகண்டு. (11, 6.) (58)
அங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்
63. |
கண்ணினுக் கினிய மேனி காளைதன் கமல வாயிற் |
|
பண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே |
|
அண்ணலுக்
கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும் |
|
பெண்ணினுக்
கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார். |
(இ-ள்.)
கண்ணினுக்கு இனியமேனி - (காண்பவரின்) கண்களுக்கு இனிமை தரும் மேனியுடைய, காளைதன் கமலவாயில் - அபயருசியின் கமலமலர்போன்ற வாயினின்றுமுண்டான,
பண்ணினுக்கு இனிய சொல்லை - கீதத்தினும் இனிய சொற்களை, படியவர் - அவ்விடத்திலுள்ளார் பலரும், முடியக் கேட்டு-
முற்றவுங் கேட்டிருந்து, அண்ணலுக்கு அழகிது - (இம்மாற்றம்) சிறந்தோனாகிய அபயருசிக்கு ஏற்றதாகும், ஆண்மை அழகினுக்கு
அமைந்த தேனும் - இவ்வாண்மை அழகுக்கேற்ப அமைந்ததே ஆயினும், பெண்ணினுக்கு அரசி ஆண்மை
|