|
பிறந்துநீ, பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ் |
|
சிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுளது முண்டோ. |
(இ-ள்.)
(ஐயனே!) இறந்தநாள் என்றும் - கடந்த நாட்களிலெல்லாம், உள்ளத்து இரங்குதல் இன்றி
- நின்மனத்தில் இரக்கமின்றி, வெய்துஆய் - கொடுமையாக, உயிர்கறந்து உண்டு - உயிரைப்
பிரித்து(க்கொன்றும் அதன் ஊனை) உண்டும், கன்றி - (அதிலேயே) மிகுதியும் அடிப்பட்டு,
கரு வினை - (பிறவிக்கு உரித்தாகிய) தீவினைகளை, பெருகச் செய்தாய் - அதிகமாகச்
செய்திருக்கிறாய், (அதனால்), நீ --, பிறவிதோறும் பிறந்து - பல பிறவிகளிலும்பிறந்து,
பெருநவை உறுவது எல்லாம் - மிக்க துன்பங்களெய்துவதெல்லாம், சிறந்த நல் அறத்தின்
அன்றி -திருவறமாகிய அந்த அஹிம்ஸையாலன்றி, தீரும் ஆறு உளது உம் உண்டோ - (ஏனைய
விரதங்களால் அத்துன்பங்கள்) தீரும் வகையாக இருப்பதும் ஒன்று உண்டோ? இல்லையென்றபடி.
கொலையால் வந்த பாபம் அறத்தாலன்றித் தவிராதென்றா ரென்க.
இறந்த - கடந்த. இரங்குதல் - மனமழிதல், கறந்து -துன்புறுத்திப்
பிரித்து: ‘கறந்து கூற்றுண்ணும’ (சீவக.2616). தான் ஈட்டிய வினைகளைத் தானே துய்க்க வேண்டுமாகலின்,
‘பிறந்து...உறுவது’ என்றார். நிச்சயமாகவேறொன்றால் தவிரா தென்றதற்கு, ‘உளதும்
உண்டோ’ என்று வற்புறுத்தினார். ‘இன்றுயிர்கொன்ற பாவத் திடர்பல
விளையுமேலால், நன்றியொன் றன்று’ என்றார் (யசோ.135) முன்னரும்.
(22)
242. |
நிலையிலா வுடம்பின் வாழ்க்கை
நெடிதுட னிறுவ வென்றிக் |
|
கொலையினான் முயன்று வாழுங் கொற்றவ
ரேனு முற்றச் |
|
சிலபக லன்றி நின்றார் சிலரிவ
ணில்லை கண்டாய் |
|
அலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங்
காலம். |
|