(இ-ள்.)
நிலைஇலா உடம்பின் வாழ்க்கை - நிலையில்லாத உடலோடுகூடி வாழும் வாழ்க்கையை, நெடிது
உடன் நிறுவ என்று - நீண்டநாள் நிலைத்திருக்கச் செய்ய எண்ணி, இக்கொலையினால்
- இக்கொலைத்தொழிலேயே, முயன்று - (வேண்டிய) முயற்சியைச் செய்து, வாழும் - --,
கொற்றவர் ஏனும் - அரசராயினும், சில பகல் அன்றி - சில நாட்கள் வாழ்ந்தனரேயன்றி,
முற்றநின்றார் - முடிய நீடித்து வாழ்ந்தவர், சிலர் இவண் இல்லை - சிலர் தாமும் இவ்விடத்து
இல்லை, கண்டாய் - (இதனை நீயும்) அறிந்திருக்கிறாய், (அந்தக் கொலைத்தொழிலால்
வந்த தீவினையினால்) அலைதரும் பிறவி முந்நீர் - துன்பந்தரும் பிறவிக் கடலில்,
அனந்தம் காலம் - நெடுங்காலம், அழுந்துவர் - மூழ்கி (முக்தியென்னும் கரை காணாது)
வருந்துவர். (எ-று..)
வாழ்க்கை
நிலையாமையும், கொலையால் வருந் துன்பமும் எடுத்தோதினாரென்க.
மக்களுள் மேன்மையுடைய அரசனேயாயினும் நெடுங்காலம் வாழ்ந்திருக்கவில்லை
யென்றார். சில பகல் - சின்னாள்; இரண்டொருநாள். ‘இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே‘
என்றார், சிந்தாமணியாரும். சிலரும் என்பதில் உம்மைவிகாரம். பிறவி முந்நீர்,
உருவகம்: பிறவியை கடல் என்றமையின் உயிர்களை, 'அழுந்துவர்' என்றார்.
(23)
243. |
இன்னுமீ தைய கேட்க இசோமதி1
தந்தை யாய |
|
மன்னவ னன்னை யோடு மாவினற்2
கோழி தன்னைக் |
|
கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன் |
|
பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ. (பம் |
(இ-ள்.)
ஐய - ஐயனே, இன்னும் ஈது கேட்க - இன்னும் இது ஒன்றை இதற்குச் சான்றாகக் கேட்பாயாக,
இசோமதி தந்தையாய மன்னவன் - (இப்போது அரசனாயிருக்கும்) யசோமதியின் தகப்பனாய
(யசோதர) அரசன், அன்னையோடு - தாயாகிய சந்திரமதியுடன், மாவின் நல்கோழி
|