பிறந்து இறந்து - திர்யக் கதியில் பல பிறப்புப் பிறந்துஇறந்து,
தளர்ந்தனர் செல்வார் - (பிறவிதோறும்) வருந்திச்செல்பவர்களாகி, அருவினை துரப்ப
வந்தார்- (மீண்டும்)அத்தீவினை செலுத்த இப்பிறவியில் பிறந்தனர்: ஈங்கு - இவ்விடத்தில்,
நின்அயல் - நின்பக்கத்தேயுள்ள, அக்கூட்டில்இருந்த - அக்கூட்டில் அடைக்கப்பட்டுள்ள,
கோழிகளும் -இரண்டு கோழிகளும், அவர் தாம் கண்டாய் - (மன்னனும்தாயுமாகிய) அவ்விருவர்களேயாவர்,
என்றான் - --(எ-று..)
யசோதரனும் தாயுமே இக்கோழிகளென்றாரென்க.
வீங்கிய - பெருகிய (யசோ. 52) காணும் பிறவுயிர்களுக்கு
வெறுப்பும் அச்சமும் தோன்றுவதனால். ‘வெருவரத்தக்க துன்பம’ என்றார். பறவைகளும் விலங்கினத்தன வாதலின், ‘விலங்கிற்
செல்வார’ என்றார். யசோ. 20. காண்க. ஆங்கு, அசை: இனி அத்தகைய
என்றும்பொருள் கூறலாம். கண்டாய் - முன்னிலையசையுமாம்.
245. |
உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை
நினைப்பி னாலிம் |
|
மயரிகள் பிறவி தோறும் வருந்திய
வருத்தங் கண்டால் |
|
உயிரினி லருளொன் றின்றி யுவந்தனர்
கொன்று சென்றார் |
|
செயிர்தரு நரகி னல்லாற் செல்லிட
மில்லை யென்றான். |
(இ-ள்.) உயிர்
அவண் இல்லை ஏனும் - மாவாற் செய்த கோழியில் உயிர் இல்லையாயினும், உயிர்க்கொலைநினைப்பினால் - உயிர்ப்பொருளைக்
கொல்கின்றோமென்னும்எண்ணத்தினால், இம்மயரிகள் - இவ்வறிவிலிகள், பிறவி தோறும் - ஒவ்வொரு பிறவியிலும், வருந்திய வருத்தம்கண்டால்
- அடைந்த துன்பங்களை அறிவோமாயின்,உயிரினில் - உயிர்களிடத்தே, அருள் ஒன்று இன்றி - அருள் சிறிதுமின்றி, உவந்தனர்
கொன்று சென்றார் - உவகையோடு கொலைபுரிந்து தம் வாழ்நாளைச் கடந்தவர்,செல் இடம் - மறுமையில் புகுமிடம், செயிர்
தரும் நரகின்அல்லால் இல்லை - வருத்ததைத் தருகின்ற (வருத்துகின்ற) நரகமல்லது
வேறு (கதி) இல்லை என்றான். என்று (முனிவர்) கூறினார். (எ-று..)
|