காட்சியுடையான், இறைவனென வுணரற் பாற்று‘ என்றுஅருங்கலச்
செப்பில் கூறியது ஈண்டு அறிதற்பாலது. விரதம் மேற்கொள்வார் செற்றம் முதலியன நீக்குதல்முறை
ஆதலின், ‘செற்றமும் சினமும் நீக்கி‘ என்றார். ஆசை முதலிய குற்றங்களும் இங்கு அடங்கும்.
செற்றம் -வைரங்கொண்டுள்ள பகைமை: சினம் - புதிதாக ஏற்படும் கோபம். முன்னம்
பகர்ந்தன என்றது 235, 236 ஆங்கவிகளில் கூறியவற்றை. விரதம் முதலியன ஆசார்யரிடமே
கைக்கொள்ளுதலியல்பு. பெரும்பயன் - வீடுபேறு. (27)
247. |
கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய
மொழிக டம்மைக் |
|
கூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள்
பிறப்பு ணர்ந்திட் |
|
டோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து1
கொண்ட |
|
பாட்டருந் தன்மைக் தன்றே2
பான்மையின் பரிசு தானும். |
(இ-ள்)
அடிகள் வாயில் கெழுமிய மொழிகள்தம்மை - அகம்பன முனிவரரின் அருள்நிறைந்த அறவுரைகளை,
கூட்டினுள் இருந்த -(சண்டகருமனுடைய) கூட்டில்தங்கியிருந்த, அக்கோழிகள் கேட்டலும்
- (முன் யசோதரனும் தாயுமாயிருந்த) அந்தக் கோழிகள் கேட்டபொழுதே,பிறப்பு உணர்ந்திட்டு
- (தமக்கு ஏற்பட்ட பழம் பிறப்பு அறிதற்கு ஏற்ற உணர்வினால்) தங்கள் முற்பிறவிகளை
யுணர்ந்து, ஒட்டிய சினத்த ஆகி - (அமிர்தமதியிடமிருந்த) கோபத்தைவிட்டனவாகி,
உறு வதம் - (தமக்குப்) பொருந்திய (அணு)விரதத்தினை, உய்ந்துகொண்ட - (தாங்கள்)
உஜ்ஜீவித்தற்காக ஏற்றுக்கொண்டன: பான்மையின் பரிசு தானும் - நல்லூழின் தன்மைதானும்,
பாடுஅருந் தன்மைத்துஅன்றே - சொல்லுதற்கரிய பெருமையோடு கூடிய தன்மையதன்றோ?
கோழிகள் பான்மையால் விரதம் மேற்கொண்டன வென்க.
‘அடிகள் வாயிற் கெழுமிய மொழி‘ என்றது, மொழி மட்டும்
அன்றி அம்மொழியை மொழிந்த முனிவரது பெருமையும் தோன்றுதற் பொருட்டு,
|