திருவொற்றியூர்
- 1116. தொண்டை நாட்டில் தேவாரம்பெற்ற
தலங்களுள் ஒன்று. (பக்கம் 1438)
துந்துபி
663. தேவ வாத்தியங்கள். ஒசை ஐந்து 750.
தொண்டைநன்னாடு
- 1078. திருக்குறிப்புத்தொண்ட நாயனாரது நாடு.
1078 முதல் 5 பாட்டுக்களையும் ஆண்டு உரைத்தவையும் பார்க்க.
நந்தனார்
- 1051. திருநாளைப்போவார் நாயனாரின் பிள்ளைத்
திருநாமம்.
நந்திமால்வரை
- 1098. தொண்டை நாட்டிலுள்ள மலைத்
தொடர்களுள் ஒன்று. இதனின்றும் பாலாறு உற்பத்தியாகிறது.
நாளைப்போவார்
- 1040. திருநாளைப்போவார் நாயனார். நந்தனார்
என வழங்கப்படுவர். அறுபான் மும்மைநாயன்மார்களுள் ஒருவர்.
நிதிக்கோன்
- 1178. குபேரன்.
பசுபதியார்
- 1030 - 1033. உருத்திரபசுபதி நாயனார். அறுபான்
மும்மை நாயன்மார்களுள் ஒருவர்.
பட்டவர்த்தனம்
- 561, 601; 776. அரசர் பட்டத்து யானையின் பெயர்.
பதும
மாநாகம் - 1132. மாநாகங்கள் எட்டனுள் ஒன்று. (பக்கம் 1456)
பவித்திரை
- 1216. விசாரசருமனாரின் (சண்டீசநாயனாரின்) தாய்.
புகலூர்
- 1017. திருப்புகலூர். (பக்கம் - 1317). தலவிசேடம் (பக்கம்
1334) பார்க்க. முருகநாயனார் அவதரித்துப் பணிசெய்து பேறடைந்த தலம்.
பாசூர்
- 1109. திருப்பாசூர். தொண்டை நாட்டில் தேவாரப்
பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. (பக்கம் 1431)
பாண்டிநாடு
- 968. மூர்த்திநாயனார் அவதரித்த நாடு; தமிழ்நாடு
எனப்படும். பாண்டியமரபு மன்னர்களால் அரசுபுரியப்பெற்றமையால்
இப்பெயர் பெற்றது. பாண்டியர் தமிழ்நாட்டு முடியுடை மூவேந்தர்களுள்
ஒருவர். தமிழ்நாடு 979.
பார்வை
- 652, 720.
பாலி
- 1099. தொண்டைநாட்டின் சிறந்த ஆறு. (பக்கம் 1421).
பூமகள்
- 1172. இலக்குமிதேவி.
பிள்ளையார்
- 862, 1027. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
காழித்தலைவராம் பிள்ளை 862. தெள்ளுமறைகள் முதலான ஞானம்
செம்பொன் வள்ளத்தில் அள்ளி யகில மீன்றளித்த வம்மை
முலைப்பாலுடனுண்ட பிள்ளையார் 1027. அழகார் புகலிப் பிள்ளையார்
1029. சரிதமும் பிறவும் அவர் புராணத்துட்காண்க.
புகழ்ச்சோழர்
- 561. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்.
அத்திருக்கூட்டத்தினுள் முடிமன்னர் அறுவருள் ஒருவர். (புராண வரலாறு
36.) எறிபத்த நாயனாரது அன்பின்நிலை வெளிப்படக்காரணராயிருந்தவர்.
இவரது சரித நிகழ்ச்சி எறிபத்தநாயனார் புராணத்திலும் இவர்தம்
புராணத்தினும் காண்க. (பக்கம் 716.)
பொன்மலை
- 552. இமயமலை என்றும் கூறுப.
பொன்னிநாடு
- 831, 903. சோழநாடு. பொன்னி என்னும் காவேரி
பாய்வது.
போகபீடம்
- 1160. திருக்காமக்கோட்டம்.
மங்கலதீர்த்தம்
- 1155. காஞ்சிபுரத்தின் புண்ணிய தீர்த்தங்களுள்
ஒன்று. செவ்வாய்க்கிழமையில் இதனுள் மூழ்குதல் சிறப்புத் தருவதென்ப.
மங்கலம்
- 932. ஆனாயநாயனார் அவதரித்த ஊர். தலவிசேடம் -
பக்கம் - 1239.
மண்ணி
- 1206; 1211. சோழநாட்டின் ஆறுகளுள் ஒன்று.
கொள்ளிடத்தினின்றும் பிரிந்து ஓடுவது. (பக்கம் 1545).
|