இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய
வரலாற்றிலும்தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார்
அவர்களின் சீரிய தமிழ்த் தொண்டு முதன்மையான இடம்
பெறுவதாகும் .அவர்ஈடு இணையற்ற பெரும் எழுத்தாளராக
விளங்கினார் .உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த முதல்
தமிழராகஅவர்திகழ்ந்தார் . “மு.வ.” என்ற செல்லப் பெயர்ஒலிக்காத
தமிழ் இல்லங்களும் நல்உள்ளங்களும் இல்லை எனலாம்.
குடும்ப வாழ்வு
அவர் , அருமை அன்னை அம்மாக்கண்ணம்மாளுக்கும் அறிவில்
சிறந்ததந்தைமுனிசாமி அவர்களுக்கும் செல்லப்பிள்ளையாக
25.4.1912 ஆம் ஆண்டு வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள
திருப்பத்தூரிலேபிறந்தார்.அவரது தாய்வழிப்பாட்டி அவரை
அன்புடன்வளர்த்தார் . முதலில் அவருக்கு வழங்கிய பெயர்
திருவேங்கடமாகும் . “தாத்தாவின் பெயரை இடுதல்” என்னும் குடும்ப
மரபுப்படிவழங்கிய பெயரே ‘வரதராசன்’ என்பதாகும்.
அவர் 1935 ஆம் ஆண்டு தம் மாமா மகளான ராதா அம்மையாரைமணந்தார்.அவருக்குஆண் மக்கள் மூவர் உள்ளனர். அவர்கள்முறையே திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகியோர் ஆவர். அம்மூவரும்மருத்துவத் துறையில் மணிகளாகத் திகழ்கின்றனர்.
|