|
மழையே வா
| |
ஊசி போல் மின்னல் மின்ன,
ஊரிக் கிணறு தண்ணிவர,
பாசி போல மின்னல் மின்ன,
பாங்கிணறு தண்ணிவர,
சட்டியிலே மாகரைத்து
சந்தை யெல்லாம் கோலமிட்டு,
கோலம் அழிய வில்லை
;
கொள்ளை மழை பெய்ய வில்லை
;
கிண்ணியிலே மாகரைத்து
கங்கை யெல்லாம் கோலமிட்டு,
கோலம் அழியவி்ல்லை
;
கொள்ளை மழை பெய்ய வில்லை
;
மேழி பிடிக்கும் தம்பி
முகம் சோர்ந்து போகு தம்மா
!
கலப்பை பிடிக்கும் தம்பி
கை சோர்ந்து நிக்கு தம்மா |
|
உதவியவர்
:
ம. கிருஷ்ணன்
சேகரித்தவர்
:
கு. சின்னப்ப பாரதி |
இடம்
:
முத்துகாபட்டி,நாமக்கல்வட்டம்,
சேலம் மாவட்டம். |
|
|