தெய்வமே காப்பு

 

வாருமையா கந்தா
வரங் கொடுமே வேலவரே
தீருமையா இவன் பிணியை
திருச்செந்தூர் வேலவரே

பச்சை நிறம் வள்ளி
பவள நிறம் தெய்வானை
சோதி நிறம் வேலவரு
சொன்ன வரம் தந்தாரே!

புங்கக் கட்டை வெட்டி - திரபதைக்கு
புளியந் தணல் உண்டு பண்ணி;
பூவே றங்கும் நேரமெல்லாம் திரௌபதை
பொன்னிற மாய் வந்தாளே.

யாரடித்தார்?

ஆரடிச்சா நீ யழுத?
அடிச்சாரச் சொல்லியழு
பேரனடிச் சாரோ
பிச்சிப்பூ கைனால?
மாமன் அடிச்சாரோ
மல்லிகைப்பூ கைனால?

மாமன் கைச் சிலம்போ
மச்சி னமார் கைச்சிலம்போ?-நீ
பேரனார் கொண்டைக்கு
வாடா மருக் கொழுந்தோ?