சேர்ந்த கிளி

நெடு நாட்கழித்து காதலர்கள் மகிழ்ச்சியோடு உரையாடுகிறார்கள்.

ஆண்:  செட்டி கடை வெட்டி வேரு
சிவ காசிப் பன்னீரு
கட்டி மருக் கொழுந்தே
கம்மாயில கூடினமே

 

பெண்: கூடினதில் குற்றமில்லை
குலத்துக் கொரு ஈனமில்லை
 ஊராரு சொல்லையிலே
 ஊடுருவிப் பாயுதையா

 

ஆண்: நந்தட்டம் பாதை வழி
நான் போவேன் ஒத்தவழி
மின்னிட்டான் பூச்சி போல
 முன்னே வந்தா லாகாதோ

 

பெண்: கல்லுரலு மேலி ருந்தது
கனிவாய நீ திறந்தா
செம்பங் கிளி வாய் திறந்தா
சேர்ந்த கிளி வந்திருமே 

 

சேகரித்தவர்:
S.S. போத்தையா

இடம்:
விளாத்தி க் குளம் பகுதி,
திருநெல்வேலி மாவட்டம்.