எழுதிய ஓடு போல
எழுத்தாணிச் சட்டம் போல
வாரிய ஓலை போல
வளையுதே ஒங்க மேனி

பட்டுக் கவரிலங்க
பாளையத்து முத்திலங்க
ஒட்டுக் கடுக்கனுக்கு
ஒளி விடுதே ஒங்க தேகம்

வீசினார் கையல்லலோ
விரிச்சார் தலைமுடியை
பூசினார் திரு நீற்றை
புருவக் கட்டை நேர் பார்த்து

அள்ளி எறிஞ்சது போல்
அஞ்சாறு தேமலுண்டு
பருத்தி இலை போல
படருதையா தேகமெல்லாம்

கம்மங் கருதிலேயோ
கணுவுக் கொரு கோணலுண்டு
என் சாமி தேகத்துல
எள்ளளவு கோணலில்லே

தூத்துக்குடி யிலேயோ
துரை மாரு ஆபீஸிலே
பஞ்சு விலை மதிக்கும்
வஞ்சிக் கொடி என் சாமி

பெரிய கம்மா பரவு தண்ணி
அதிலொரு நாள் ஸ்னானம் பண்ணி
செங்க மங்கத் தண்ணியிலே
தெரியுதையா உங்க முகம்

மிஞ்சியோ மின்னுறது
மேல் முருகோ கொஞ்சுறது
தங்கத் துரைகளுக்கு
தாயத் தோ மின்னுறது

மருவு படர்ந்த கிளி
மனித ரோட பேசுங்கிளி
தேமல் விழுந்த கிளி
தினம் வருமாம் இந்த வழி

எண்ணைத் தலை முழுகி
என் தெருவில் போற மன்னா
வண்ணத் தலை மயிரு
கண்ணைப் பறிக்குதையா

கட்டக் கம்பு கையிலெடுத்து
காரணமா வார சாமி
சினந்து வழி நடந்தா
சிங்க முடி போலிருக்கும்

வட்டார வழக்கு : லாவிருவா-சேர்த்துக் கொள்வாள்.

(பல பாடல்களின் தொகுப்பு)

சேகரித்தவர் :
S.S.போத்தையா

இடம் :
நெல்லை மாவட்டம்.