|
எட்டு நாளாய்ப் பேசவில்லை
இரண்டு பெண்கள் கிணற்றுக்குள்ளிருந்து குளித்துக் கொண்டிருக்கிறார்கள்
!
அவர்களுள் ஒருத்தியின் காதலன் அவர்களைக் கண்டும் காணாதது போலப் போகிறான். அதைப்
பார்த்த காதலி தனது தோழியிடம் தனியாகப் பருத்தி விளைக்குள்ளிருத்த தன்னை அவன் மெல்ல
அழைத்ததை கூறுகிறாள். தோழி,
'அப்படியானால்
இப்போழுது அவன் கோபித்துக்கொண்டு செல்வதேன்?
'
என்று கேட்கிறான்.
'
அது பெரிய விஷயமல்ல.
சிறு சச்சரவினால் ஏற்பட்ட ஊடல்
'
என்கிறாள் காதலி.
| காதலி: |
பால் போல் நிலாவடிக்க
பருத்திக்குள்ள
நானிருக்க
மின்னுவெட்டான்
பூச்சி போல-அவன்
மெல்ல
வந்து கூப்பிட்டானே
|
| தோழி: |
இரும்பாலே கிணறு வெட்டி-நீ
இருந்து
குளிக்கையிலே
கரும்பான
அத்தை மகன்
கையலைச்சுப் போரானடி
|
| காதலி: |
ஆத்துல
ஊத்துத் தோண்டி
அவரும் நானும்
பல் விளக்க
எச்சித்தண்ணி
பட்டுதுன்னு-என்னோட
எட்டு நாளாப்
பேசலியே |
வட்டார வழக்கு:
மின்னுவெட்டான்
பூச்சி-மின் மினி; கையலைச்சு-கைவீசி; ஆத்துல, ஊத்து-ஆற்றில், ஊற்று.
|
சேகரித்தவர்
:
S.M.
கார்க்கி |
இடம்
:
சிவகிரி,
திருநெல்வேலி மாவட்டம்.
| |