பொருந்திற்று அருங்கிளிக்கு
பத்துப் பொருத்தம்
பொருந்திற்று பாண்டியற்கு
செல்லக் கலியாணம்
சிறப்பாக நடத்தவென்று
நல்ல நாள் பார்த்து
நாள் முகூர்த்தம் தானும் வைத்தார்
செல்வருக்குக் கல்யாண மென்று
சீமையெங்கும் பாக்கு வைத்தார்
புத்திரர்க்குக் கல்யாணமென்று
பூமியெங்கும் பாக்கு வைத்தார்
தட்டாரைத் தானழைத்துத்
தாலி சமையுமென்றார்
அரிசி போல் மாங்கலியம்
ஆரிழைக்குச் சமையுமென்றார்
உளுந்து போல் மாங்கலியம்
உத்தமிக்குச் சமையுமென்றார்
தாலி சமைக்க வென்று
தாம்பூலம் தான் கொடுத்தார்
வாழைமரம் நட்டி
வாசல் அலங்கரித்து
பாக்குமரம் நட்டி
பந்தல் அலங்கரித்து
அம்மி வலமாக
அரசாணி முன்பாக
அரகரா மாங்கலியம்
ஆரிழைக்குக் கட்டுமென்றார்
சிவா சிவா மாங்கலியம்
திருக்கழுத்தில் கட்டுமென்றார்
பூவும் மணமும்
பொருந்திய தன்மைபோல்
தேவியும் மன்னவரும்
சேமமாய் வாழ்ந்திருங்கள்
பாலும் சுவையும் போல்
பார் தனிலே எந்நாளும்
பூ மகளும், நாயகனும்
பொற்பாக வாழ்ந்திருங்கள்
கன்னியோட கற்பும்
கணவனோடு மெய்மொழியும்