எதிர்ப்பாட்டு
கிராமங்களில் மாட்டுக்காரச் சிறுவர்கள் நேரத்தைப் போக்க ஒருவருக்கு ஒருவர் போட்டி
போட்டுக் கொண்டு பாடுவார்கள். அதில் வசையும், கேலியும் கலந்து இருக்கும். தமிழ்நாட்டின்
எல்லா பகுதிகளிலும் பாடப்படுகின்றன.
ஒருவன்: |
வறுத்த கடலை தின்னி
வகை
வகையாத் தவிடு தின்னி
சொறியாந் தவளை தின்னி
சொல்லி
வாடா தெம்மாங்கை
|
அடுத்தவன்: |
எதிர்ப் பாட்டு பாடாதடா
எனக்கு வெட்கம் ஆகுதடா
சுரக்குடுக்கை
வாங்கித்தாரேன்
சொல்லாதே ஓடிப்போடா
|
ஒருவன்: |
சுண்டெலி லாலா
சுடுகாட்டு மண்டெலும்பே
அண்டத்து மயிர் எலும்பே
அடக்கடா தெம்மாங்கை
|
சேகரித்தவர்
:
வாழப்பாடி சந்திரன் |
இடம்
:
ஆத்தூர்,
சேலம் மாவட்டம். |
|