சிவகாசிக்
கொள்ளை-4
சீர்வளரும் திருநெல்வேலி ஜில்லாவை
சேந்த சிவகாசி கொள்ளை தன்னை
பேர் வளரும் கும்மி பாட ஐங்கரண்
பிள்ளை மலர் பாதம் காப்போமே.
தேசம் புகழ் காசியின் சிங்காரம்
செப்ப வேணு மென்றால் ஒப்பனையாய்
வாசனும், ஆதிகேசலும் ஆயிரம்
வாயினால் சொல்ல முடியாதே
நீல மணி முத்து மாடங்களாம் அண்ட
கோளம் அளாவிய கூடங்களாம்
செல்வம் மிகுந்திடும் வெள்ளாளர் நாயக்கர்
செட்டி மறவர்க்கும் நாடார்க்கும்
பல் வகையாய்ச் சிவன் கோயில் விஷயமாய்
பார வழக்கு நடந்ததுவே.
96-ம் வருடத்தில் கார்த்திகை
சோம வாரம் அந்த உற்சவத்தில்
திண்ணமாய் நாடார்க்கும் பிள்ளை மார்க்கும் ஒரு
செய்தி நடந்ததைச் சொல்லுகிறேன்
:
வெள்ளாளர் சாமியை எழுந்தருளச் செய்து
வீதி வலமாய் வருகையிலே
மெள்ளவே நாடார்கள் பத்திர காளிக்கு
மேலான உற்சவம் செய்ய வென்று
தாங்களும் சாமி எழுந்தருளச் செய்து
சந்தியிலே அவர் முந்திக் கொண்டு
பாங்காகச் சாமியைப் போக விடாமல்
பலத்த கலகங்கள் செய்தனராம்
கல்லெறிந்து சிலர் சில்லரை செய்கின்ற
காலத்தில் ஆறுமுகம் பிள்ளை
மெல்லவே தந்தியடிக்கக் கலைக்டரும்
மேவும் போலீஸ் காரர் தான் வரவே
கெட்டிக்காரர் சுத்துப் பட்டி மறவர்க்கும்
கிள்ளாக்கு வட்டிப் பிள்ளை அவர்
அட்டி இல்லாமல் அனைவரும் வந்து
அழகாய்த் திருவிழாத் தான் நடத்த
வந்த தேவ மாரைக் கொள்ளை செய்தாரென்று
வல்ல நாடார்கள் பிராது செய்தார்
தந்திரமாய் மேஜிஸ்ரட்டார் பிராதை
தள்ளி விட்டார் வெகு துல்லியமாய்
நாராயண சாமி பிள்ளை டிப்டி மேஸ்திரி
நியாய வழக்கைத் தான் உரைத்தார்
தோரணையான அதிகாரத்தால் கட்சி
தோன்றா திருந்தது சில காலம்
வல்ல அதிகாரி போன பின்பு-ஜூலை
|