எத்து களாய்ச் சில சொத்துக்களை
ஏமாத்தம் செய்தார் சாலை ஓரம்
நாயக்கர் கம்பள மீனம் பட்டி வழி
நாடிய கைம் பெண் ஒருத்தி
மத்தியானத்தில் ஒருத்தியைக் கொன்றானாம்
மூவர்கள் நாடார்கள் கொலை செய்த கைதிக்கு
ஏழுவருடம் கொடிய தண்டனைகள் தான் முடித்து
உலகில் சுத்துப் பட்டி நாயக்கர் தேவர்க்கும்
ஓங்கிய கோபம் தணியவில்லை
மாரினேரி ஓரம் பள்ளரைக் கொலை யொன்று
பத்து மணிக்குச் செத்ததனால்
காரியம் இல்லாக் குடும்பர்க்குக்
கோபம் இருந்தது சில நாளாய்
ஏப்ரல் மாதம் இருபத்தாறாந்தேதி
எனும் சிவகாசி மறவர் வாய்ப்புடன்
கடை கட்டும் அந்த வேலை வகுத்தார்
நாடார் விரோதங் கொண்டு
நாடார் சிலபேரும் கடைக் கெட்ட விடாமல்
தடுத்துக் கொண்டு
சண்டை பேட்டையில் தாக்கினான் அக்கினி
ஊக்கமாய் வல் உலகனும் மறவரும் சேர்ந்துமே
வன்மை நாடார்களைத்தான் விரட்டி மெல்லவே
காளியம்மன் பேட்டையில் தீ வைத்து
வேடிக்கை செய்தார் அந்நேரம்
சிங்கக்குட்டி ரெங்கா ராவுத்தர் பெற்றிடும்
செகு முகம்மது காசியும்
சங்கையில்லாமல் வாள் ஆயுதம் கொண்டார்
சாடின நாடார்கள் ஓடிவிட்டார்

வட்டார வழக்கு: கிள்ளாக்கு-கிளார்க்கு ; மாஜிஸ்திரார்-மாஜிஸ்டிரேட் ; கெட்ட-கட்ட.

குறிப்பு : இப்பாடல் நாடார்களுக்கு விரோதமான கட்சியார் எழுதிய பாடல்.


சேகரித்தவர் :
S.S.போத்தையா

இடம் :
விளாத்திக்குளம்,
நெல்லை மாவட்டம்.