ஓடாதே மானே
ஒளிந்திருப்பான் வேடன்
ஓட்டங்கண்ட மானை
வேடன் துயந்தானே
பன்னீரும் செம்பும்
பாலன் தலைமேலே
பன்னிருகால் ரெண்டு
பன்னிருகால் மூணு
பன்னிருகால் நாலு
பன்னிருகால் ஐந்து
பன்றி குத்தப் போன
பாலன் வரக் காணோம்
பன்றிகளைப் பார்த்தால்
பாரமலை போல
சிங்கம் குத்தப் போன
சீமான் வரக் காணோம்
சிங்கங்களைப் பார்த்தால்
சிறு புலிகள் போ
பன்னிரு காலாறு
பன்னிரு காலேழு
பன்னிருகாலெட்டு
பண்ணிப் பதித்தாண்டி
பண்ணிப் பதித்தாண்டி
பத்துலெட்சம் பொன்னு
எண்ணிப் பதித்தாண்டி
எட்டுலட்சம் பொன்னு
பாப்பாரப் பெண்ணே
முகப்பாயோ தண்ணி
விருந்தாடிப் பெண்கா(ள்)
இருந்தாரிப் போங்க
இருபதிகா ரெண்டு
இருபதிகா மூணு
இருபதிகா நாலு
இருக்க நல்ல சோலை
இருக்க நல்ல சோலை
குளிக்க நல்ல பொய்கை
இருக்கையிலே கண்டேன்
திருப்பதி மலையை
|