|
திடீர் நிகழ்ச்சி
தாலியிண்ணாத் தாலி-நான்
தங்கத்தால் பொன் தாலி
தாலி கழற்றிட-எந்தன்
தருமருக்கே சம்மதமோ
குளத்தங்கரையோரம்-நான்
குயிலுணு நிக்கையிலே-என்ன
குயிலுணு பாராமே-என்னைக்
குண்டால எய்தார்கள்
ஆத்தங் கரையோரம்-நான்
அன்னம் போல் நிக்கயில
அன்ன மிண்ணும் பாராமல்-என்ன ஒரு
அம்பால எய்தார்கள்
கத்தரியும் பாவையும்
காக்கும் படுவையிலே-நான்
கர்ணனார் பெத்த மகள்-நான்
கற்பனைக்கு ஆளானேன்
வெள்ளரியும் பாகலும்
விளையும் படுகையிலே-நான்
வீமனார் பெத்த மகள்-நான்
வெயில் படக் கண்டியளோ?
வட்டார வழக்கு: சித்திரக்காலி,
மணல்வாரி, உப்பூத்தி-இவை நெல்வகை உரைக்குங்குள்ளே-உரைப்பதற்குள் துணுக்கிட-அச்சமுற
;
மொழி-வழி
; தொயந்தது-தொடர்ந்தது
;
பெறக்கி-பொறுக்கி.
குறிப்பு
:
மூன்று பாடல்களிலும் கடினமாக முயன்று பெற்ற அமைதியான
வாழ்க்கை சரிந்துவிட்டதை வருணிக்கிறாள். சோற்றுக்கு உவமை-புளியம்பூ ஆவாரம்பூ.
குண்டால எய்தார்கள், அம்பால் எய்தார்கள்-கணவனைக் காலதூதர்கள்
திடீரென்று விலங்குகளை வேடர் எய்து கொல்வது போலக் கொண்டு போய்விட்டார்கள். அந்தத்
துக்கத்தின் வேதனையை மனைவிதான் அனுபவிக்கறாள். திடீர் துன்பத்தை நமக்கு விளக்க இரண்டு
உவமைகள் கையாளப்பட்டன.
கருணன், வீமன்-நாட்டுப் பாடல்களில் மக்களால்
விரும்பிப் போற்றப்படும் வீரர்கள் தருமர், வீமன், கருணன், அர்ச்சுனன். இராமாயணக்
கதையை விட பாரதக்கதை தான் பாமர மக்களுக்கு விருப்பமானது.
|
சேகரித்தவர்:
S.M. கார்க்கி |
இடம்:
சிவகிரி,நெல்லை. |
|