|
கையைப் புடிச்சுப் பார்க்க
தோஷம் பிறந்திருச்சே
பீரங்கிச் சத்தம் கேட்டு
பெஞ்சுத் துரை மாரெல்லாம்
ஏறி வந்த மொட்டக்காராம்
எண்ணத் தொலையல்லே
தடிச்சுழுத வய
தடிச்சதொரு பொய்ச் செலந்தி
மாயச் செலந்தி வந்து
மாண்டாரே நம்ம துரை
ஆடழுக மாடழுக
மாடப் புறா தானழுக
சிவகிரி ஜனங்கள் எல்லாம்
தெருத் தெருவாக நின்னழுக
வாடகை மோட்டார்க் காராம்
வந்து கிடைத்தல்லோ
சிவகிரி மகாராஜா
செத்த வுடனே யல்லோ
சுப்பையா கோயிலோரம்
சூறாவளி மங்களாவாம்
கெட்டிடங்கள் சீரில்லைனு
இடிச்சு கட்ட உத்தரவு.
டொப்பி சொகுசழகர்
துரைமார் பெரிய இடங்கள்
இங்கிலீசுக் காரியாலே
இறந்தாரே நம்ம துரை
பட்டணத்து சைசுலேயே
பாங்குடனே சேக்கு வெட்டி
சீவி விட்ட சிங்காரத்தை-இந்த
சீமை எங்கும் பார்த்ததில்லை
காணிக்கை கருவேலம் போல்
கண்டுதித்த பாண்டியரே
இறக்க கோடு விட்டு
ராணிப்பட்டம் கேக்காரே.
|
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி |
இடம்:
சிவகிரி,நெல்லை. |
|