|
மேல் கூறிய கருத்துக் கொண்ட வேறு இரண்டு
பாடல்கள் பின்வருமாறு
:
எட்டு மலைக் கந்தாண்ட
ஈசுவரன் கோயில், அங்கே
ஈசுவரன் கோயிலிலே
இலந்தை படர்ந்திருக்கும்
இலந்தைப் பழம் உண்ண வரும்
எண்ணாயிரம் பச்சைக் கிளி
எங்கொறையைச் சொன்னாலே
இலந்தைப் பழம் உண்ணலையே-என்
எண்ணங்களும் நீங்கலையே
பத்துமலைக் கந்தாண்ட
பரமசிவன் கோயிலண்ட
பாவை படர்ந்திருக்கும்
பழுத்தும் போப் பழமிருக்கும்
பாவைப் பழம் உண்ண வரும்
பத்தாயிரம் பச்சைக்கிளி
பாவி என் குறைக்கேட்டு
பாவைப் பழம் உண்ணலையோ-என்னுடைய
பாதரவும் நீங்கலையே
வட்டார வழக்கு
:
பாவை-பாகல்
;
கொறை-குறை.
|
உதவியவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
சேலம்
மாவட்டம். |
|